இந்தியா சாதனையாளர்கள்

பூமிதான இயக்கத்தின் தந்தை

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மகாராஷ்டிரா மாநிலத்தில்  கொலாபா மாவட்டத்தில்  ககோடா என்னும் கிராமத்தில்
1895 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி  பிறந்தவர்  வினோபா  பாவே.

இவர்  ஒரு சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.   அறப்போராளி.  மனித உரிமைகள் ஆதரவாளர். பூமிதான இயக்கத்தின் தந்தையும் ஆவார்.

கதராடை தயாரிப்பு, கிராமத்தில் தீண்டாமை ஒழித்தல், கிராம மக்களின் கல்வி, சுதந்திரம், தொழில் வளர்ச்சி,  மேம்பாடு ஆகியவற்றிற்காக பாடுபட்டவர்.

ALSO READ  suzuki வாகனங்களின் விலை அதிகரிப்பு

பூதான் எனும் பூமிதான இயக்கத்தை தொடங்கிய இவர், பூமிதான இயக்கத்தின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார்.

13 ஆண்டுகள் நாடு முழுவதும் உள்ள பல்லாயிரக்கணக்கான இடங்களுக்கு நடைபயணம் மேற்கொண்ட இவர், 40 லட்சம் ஏக்கர் நிலத்தைத் தானமாகப் பெற்று உள்ளார்.

மேலும் பசுவதை தடை சட்டத்தை கொண்டு வருவதற்காக 1979 ஆம் ஆண்டு உண்ணாவிரதம் இருந்துள்ளார்.

“காந்தியத்தை சிறப்பாக உள்வாங்கிக் கொண்டவர் “என காந்திஜியால் புகழாரம் சூட்டப்பட்ட இவர், மக்களாலும் ஆச்சாரியா என்று போற்றப்பட்டுள்ளார்.

ALSO READ  கொரோனா வைரஸ் அச்சத்தால் ரயில்களில் A/C பெட்டிகளில் பயணிகளுக்கு போர்வை வழங்குவது நிறுத்தம்- ரயில்வே உத்தரவு....

வினோபா பாவே தனது 87 வது வயதில் 1982 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ம் தேதி  காலமானார்.

வினோபா பாவே வின்  மிகச்சிறந்த தேசிய  சேவையை பாராட்டி  அவரது மறைவுக்குப் பின் மத்திய அரசால் 1983 ல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

எஸ். ராஜலெக்ஷ்மி


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

குஜராத்தில் நாளை முதல் ஊரடங்கு அமல் !

News Editor

கொரோனா உயிரிழப்பு; உலக நாடுகளை பின்னுக்கு தள்ளி இந்தியா !

News Editor

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு..!

Admin