திருவாரூர்
திருவாரூர் அருகே மருதப்பட்டினம் பகுதியை சேர்ந்த சேதுராசன் – சுதா தம்பதியினர் மகன் மாதவ். ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார்.
கொரானா தொற்று காலத்தில் பள்ளிகள் செயல்படாத சூழலில் வீட்டில் சும்மா பொழுதைக் கழிக்காமல் உருப்படியான காரியம் செய்து அசத்தியுள்ளார் மாதவ்.
சிறுவயது முதலே கணினி மீது தீவிர ஆர்வம் கொண்ட மாதவ் வீட்டில் இருக்கும் போது கொரானா தொற்று காலத்தில் நேரத்தை வீணாக்காமல் ஆன்லைன் மூலமாக ஜாவா, சி, சி பிளஸ் பிளஸ், பைத்தான் போன்ற கணினி சாப்ட்வேர் பயிற்சிகளை முடித்துள்ளார்.
இதன் மூலம் ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் மென்பொருள் தொழிநுட்ப கலைஞருக்கு உரிய பயிற்சியைப் பெற்றுள்ளார். தனது தொழில்நுட்ப கண்டுபிடிப்பால் உலகையே திரும்பி பார்க்க வைத்திருக்கிறார்
கம்ப்யுட்டரை இயங்கச் செய்யக் கூடிய மைய செயலாக்க கருவி என்று அழைக்கப்படக்கூடிய சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட்டை (CPU) கையடக்க அளவில் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார் மாதவ்.
ஒரு ஐடி நிறுவனத்தில் வேலை பார்க்கும் மென்பொருள் தொழிநுட்ப கலைஞருக்கு கூட இது அனைத்தும் தெரியுமா என்றால் சந்தேகமே. கணினியை இயங்கச் செய்யக் கூடிய கையடக்க சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட்டை (CPU) கருவியை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார் மாதவ்.
கையடக்க ககையடக்க சென்ட்ரல் ப்ராசசிங் யூனிட் கருவியை உருவாக்கிய மாதவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.