ஜெயலலிதா தன்னுடைய 15 வயதில் கன்னடப் படமான ‘சின்னட கொம்பே’ திரைப்படத்தில் அறிமுகமானார்.
கன்னடத்தில் வெற்றிபெற்ற ஜெயலலிதாவின் திரைப்படங்கள், சின்னட கொம்பெ (1964), மவன மகளு (1965), நன்ன கர்டவ்யா (1965), படுகுவா டாரி (1966).
ஜெயலலிதா, 1965 – 1980 இடையேயான காலக்கட்டத்தில் தென் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாக அறியப்பட்டார். மற்ற நடிகைகளே மிகவும் பொறாமை கொண்ட காலக்கட்டம் அது
இந்த காலக்கட்டத்தில்தான் அவர் 100க்கும் மேற்பட்ட திடைப்படங்களில் நடித்தார். அதில் பெரும்பாலான படங்கள் நூறு நாட்களுக்கும் மேலாக ஓடின. ரசிகர்கள் இடையே மிகப்பெரிய வரவேற்பும் அவருக்கு கிடைத்தது.
தமிழ், கன்னடம், தெலுங்கு என 1961 முதல் 1980வரை 140 படங்களில் நடித்துள்ள ஜெயலலிதா, எம்.ஜிஆருடன் இணைந்து 28 படங்களில் நடித்துள்ளார். அந்த படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
1972-ம் ஆண்டு தமிழக அரசின் சிறந்த நடிகைக்கான கலைமாமணி விருது ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்டது.
ஜெயலலிதா தன்னுடைய முதல் திரைப்படத்திற்கு சம்பளமாக பெற்ற தொகை ரூபாய் மூவாயிரம்.
யாகம் வளர்ப்பதிலும், ஹோமத்தில் உட்காருவதிலும் ஜெயலலிதாவிற்கு ஈடுபாடு அதிகம். யாகத்தில் 6 மணிநேரம் வரை கூட உட்கார்ந்திருக்கிறார். அவசரமாக மந்திரம் சொன்னாலோ, தவறாக மந்திரம் சொன்னாலோ கண்டுபிடித்து நிறுத்தச் சொல்லும் அளவுக்கு வேதஞானம் உண்டு.
இந்தியாவில் உள்ள அத்தனை துறை பிரபலங்களையும் தனது “வாக் அண்ட் டாக் “பேட்டிக்கு வரவழைத்த NDTV தொலைக்காட்சியால் ஜெயலலிதாவின் மனதை மட்டும் மாற்றமுடியவே இல்லை.கடைசிவரை உறுதியாக இருந்து மறுத்துவிட்டார்.