1922 -ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி திருவாரூர் மாவட்டம் காட்டூரில் பிறந்தார்
இவரது இயற்பெயர் இராமையா. தமிழ் மீது கொண்ட பற்றால் அன்பழகன் என தனது பெயரை மாற்றிக்கொண்டார்.
1977 முதல் தொடர்ந்து 43 ஆண்டுகளாக திமுக-ன் பொதுச்செயலராக பதவி வகித்தார். இவர் ஒருவர் தான் இந்தியாவில் அதிக நாட்கள் ஒரே பதவி வகித்தவர் என்ற பெருமையையும், சாதனையையும் உடையவர். ஏனெனில் எந்த ஒரு கட்சிக்கும்; இயக்கத்திற்கும் இவ்வாறு ஒரே நபர் நீண்ட நாட்களாக பொதுச்செயலராக இருந்தது கிடையாது.
அண்ணாமலை பல்கலைகழகத்தில் B.A தமிழ் பட்டம் பெற்றவர்.
சென்னை பச்சையப்பன் கல்லூரியில் 1944 முதல் 1957 வரை துணைபேராசிரியராகப் பணியாற்றினார்.
1957-ல் எழும்பூர் தொகுதியில் திமுக-வின் சட்டப்பேரவை உறுப்பினராக முதன்முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
1962 -எழும்பூரில் காங்கிரஸ் வேட்பாளர்
ஜோதி வெங்கடாச்சலத்திடம் தோல்வியடைந்தார்.
அதே ஆண்டில் தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினரானார்.
1962-சென்னை-செங்கல்பட்டு தொகுதிக்கான இடைத்தேர்தலில் வெற்றிபெற்றார்.
1967 முதல் 1971 வரை திருச்செங்கோடு தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்.
1971 – புரசைவாக்கம் தொகுதியில் வென்று திமுக அமைச்சரவையில் சமூகநலத்துறை அமைச்சரானார்.
1975-ல் தலைவர் கருணாநிதியை ஒதுக்கிவிட்டு பலரும் விலகிச் சென்ற நேரத்திலும் விலகாது உடனிருந்தவர் பேராசியர். அதனால் தான் இறுதிவரை கழகத்தில் கருணாநிதிக்கு அடுத்த நிலையில் போற்றப்பட்டார்.
மீண்டும் 1977, 1980-ம் ஆண்டுகளில் புரசைவாக்கம் சட்டப்பேரவை உறுப்பினர்.
1983-ல் இலங்கை தமிழ் மக்களின் ஈழக்கோரிக்கையை வலியுறுத்தி கருணாநிதியுடன் சேர்ந்து ராஜினாமா செய்தார்.
1984-ம் ஆண்டு பூங்கா நகர் தொகுதியில் வெற்றி பெற்றார்.
1989-ல் அண்ணா நகர் தொகுதியில் வென்று கல்வி அமைச்சரானார்.
1991- ல் சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியுற்றார்.
1996-ல் துறைமுகத்தில் போட்டியிட்டு வென்று மீண்டும் கல்வி அமைச்சர்.
2001-ல் மீண்டும் துறைமுகம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி.
2006- ல் மீண்டும் துறைமுகம் தொகுதியில் வென்று நிதி அமைச்சரானார்.
2011-வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி.
2016- சட்டமன்ற தேர்தலில் வயோதிகம் காரணமாக போட்டியிடவில்லை.