சாதனையாளர்கள்

92 மணி நேரம்….12000 முறை வானிலிருந்து குதித்து சாதனை….தமிழரின் போற்றதக்க சாதனை..

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தேனி :

தேனி மாவட்டம் பெரியகுளம் வடகரையைச் சேர்ந்தவர் ராஜ்குமார்(44). இந்திய கடற்படையில் அதிகாரியாக பணியாற்றிய போது வான்வெளி சாகசத்துக்காக தேர்வான 5 வீரர்களில் இவரும் ஒருவர்.

கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2010 வரை அமெரிக்கா, ரஷ்யா, கனடா, நியூசிலாந்து உள்பட பல நாடுகளில் நடந்த வான்வெளி சாகச போட்டிகளில் ராஜ்குமார் பங்கேற்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார்.விமானம், ஹெலிகாப்டர் மூலம் 13 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து அங்கிருந்து கீழே குதித்து ஒரு சில வினாடிகளில் குழுவினருடன் இணைந்து டைமண்ட், சர்க்கிள் வடிவில் சாகசங்களை நிகழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ALSO READ  அக்டோபர்-13 வானில் நிகழும் அதிசயம்…..மிஸ் பண்ணிடாதீங்க….அப்புறம் வருத்தப்படுவீங்க…..

72 மணி நேரத்தில் 8 ஆயிரம் முறை வானில் இருந்து குதித்து சாகசம் செய்ததை பாராட்டி கடந்த 2016-ம் ஆண்டு மத்திய அரசின் ‘டென்சிங் நார்கே’ என்னும் உயரிய விருதை பெற்றுள்ளார். இந்த விருது அர்ஜூனா விருதுக்கு சமமானது.

இதுகுறித்து ராஜ்குமார் தெரிவிக்கையில்,”2006-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை 92 மணி நேரத்தில் 12 ஆயிரம் முறை வானில் இருந்து குதித்து சாகசத்தை செய்துள்ளேன். எனது இந்த சாதனையை பாராட்டி மாவட்ட நிர்வாகம் சார்பில் தமிழக அரசு பத்மஸ்ரீ விருதுக்கு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இது எனக்கு பெருமையாக உள்ளது” என கூறினார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சிறு வயதில் வறுமை.. படிப்பு ஒன்றே பிரதானம்..டிஜிட்டல் துறையில் சாதித்த தரணீதரன்

News Editor

10 ஆண்டுகளில் அசைக்க முடியாத வீரராக மாறிய விராட் கோலி

Admin

இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் பிறந்த தினம் இன்று

Admin