கொரானா தொற்று காரணமாக அனைத்து பணிகளும் கடந்த ஏப்ரல் மாதம் முதல் முடக்கப்பட்டிருந்தது, கடந்த சில வாரங்களாக கொரானா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது, இதற்கிடையே தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தோற்று குறைந்தபாடில்லை. ஆனால் தற்போது கேரளா மாநிலத்தில் நாளை (09.08.2021) முதல் சுற்றுலா செல்ல அரசு அனுமதி அளித்துள்ளது.
கேரளா மாநிலத்தில் முக்கியமான சுற்றுலா தலம் தேக்கடியாகும். இச்சுற்றுலாத்தலம் மூன்று மாதத்துக்கு பிறகு நாளை திறக்கப்பட உள்ளது. இங்கு படகு சவாரி, யானை சவாரி, மலையேற்றம், புலிகள் சரணாலயம்
உள்ளிட்ட பல பொழுது போக்குவதற்கான இடங்கள் உள்ளன. பொதுவாகவே இங்கு குளுமையான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து சுற்றுலா பயணியர்கள் குவிந்த வண்ணம் இருப்பார்கள்.
தற்போது கொரானா தொற்று பாதிப்பு குறைந்து வருவதால் நாளை முதல் தேக்கடியில் சுற்றுலா பயணம் மேற்கொள்ள பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.