ஜோதிடம்

மாசி மாத பலன்கள்…புதிய வாழ்க்கையை தொடங்கும் தனுசு ராசிக்காரர்களே…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராசிநாதனான செவ்வாயும் குருவும் இணைந்து ராசியில் இருப்பது மிகச் சிறப்பான அமைப்பாகும். உங்களுடைய மன வேதனைகளில் இருந்து சற்றே நிம்மதி கிடைக்கும். கடந்த காலங்களில் எல்லா வகையிலும் துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருந்த தனுசு ராசிக்காரர்கள் ஜென்ம சனி காலத்தை முடித்துவிட்டு அடுத்த கட்டத்துக்கு வாழ்வு நகர்கிறது என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை சனி உங்களை புரட்டி எடுத்து சொல்லிக் கொடுத்த பாடத்தை மனதில் பதிய வையுங்கள்.

. எந்த பள்ளிக்கு சென்றாலும் எவ்வளவு தொகை கட்டணம் செலுத்தினாலும் சனி சொல்லிக் கொடுத்த பாடத்தை உங்களால் வேறு எங்குமே கற்றிருக்க முடியாது. சனிக்கு ஒரு சலாம் வைத்துவிட்டு வாழ்க்கையைத் தொடருங்கள். தற்போது இரண்டாம் இடத்திற்கு பெயர்ந்துள்ள சனி உங்கள் குடும்ப விஷயங்களிலும் யாருக்காவது ஏதாவது வாக்கு கொடுத்து இருந்தால் அதை கண்ணும் கருத்துமாக செயல்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறீர்கள் என்பதை உணர்த்துகிறது. வருமானம் வரும் வழியில் சில தேக்கநிலை இருக்கலாம். ராசி அதிபதி ஆட்சி பெற்ற நிலையில் நல்ல வலுவுடன் இருப்பது எந்த பிரச்சினைகள் வந்தாலும் அதை நீங்கள் சமாளித்துக் கொள்வீர்கள்.

மனதில் தளர்வும் தன்னம்பிக்கை அற்ற நிலையும் உருவாகும் பொழுது உங்களை நீங்களே தேற்றிகொள்ள வேண்டும். இனிமேல் பெரிய கெடுதல்கள் எதுவும் இருக்காது புதியதாக எந்த பிரச்சினையும இருக்காது அதே நேரத்தில் பழைய பிரச்சினைகளுக்கான தீர்வுகளை நீங்கள் தேடிக் கொண்டிருக்க வேண்டிய காலம் இது. சற்று பொறுமையுடனும் நிதானத்துடனும் யோசித்து செயல்பட்டால் அந்த பிரச்சனைகளுக்கான தீர்வுகளையும் நீங்களே கண்டுபிடித்து விடுவீர்கள். சிலருக்குத் திருமண வாழ்வு அமைவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

ALSO READ  மோடி - சீன அதிபரை வரவேற்று தமிழக அரசு சார்பில் பேனர் வைக்கலாம்

மனம் படிப்படியாக லேசாகும் படியான நிகழ்வுகள் உங்களை சுற்றி நடந்து கொண்டே இருக்கும். ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் அதிபதியான சூரியன் மூன்றாம் இடத்தில் இருப்பது உங்களுடைய முயற்சியின் அளவும் திறமையும் செயல்திறனும் அதிகரிக்கும். தாய்மாமன் உடன் இருந்த உறவுச் சிக்கல்கள் இனிதே நிறைவுபெறும் பெண்கள் மூலம் ஆதாயம் உண்டு.

சந்திராஷ்டம நாட்கள் அன்றுஅணைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.மனம் ஒரு நிலையில் இல்லாமல் சற்று எரிச்சலான ஒரு நிலையில் இருப்பீர்கள் என்பதால் எவரிடமும் வீண் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது.

ALSO READ  தமிழகத்தை மிரட்டும் கொரோனா; ஒரே நாளில் 34 ஆயிரம் பேருக்கு தொற்று !

சந்திராஷ்டம நாட்கள்: 6-ம் தேதிஅதிகாலை 5.00முதல் 8-ம் தேதி காலை7:00வரை.

வழிபட வேண்டிய தெய்வம்:ஹனுமான்.

இந்த ஜோதிட பலன்களை கணித்தவர் திருமதி. ஜனனி ஸ்ரீதர் (DNA astrologer) . மேலும் சந்தேகங்கள் மற்றும் பலன்களுக்கு astrotamiltalk@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

மேலும் காணொளியில் காண: https://bit.ly/2OukP6E


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இதுவரை கண்டிராத நயன்தாரா விக்னேஷ் சிவன் வீடியோ…

naveen santhakumar

கருவூரார் எனும் கருவூர் சித்தர்

Admin

டோல்கேட்ல வாங்குற ரசீதை என்ன செய்றீங்க?

Admin