ஜோதிடம்

மாசி மாத பலன்கள்… எதிரிக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் துலாம் ராசிக்காரர்களே…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராசிக்கும் எட்டாம் இடத்திற்கு அதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்ற நிலையில் இந்த மாதம் முழுவதும் இருக்கிறார். இது துலாமிற்கு மிகுந்த நன்மைகளை கொடுக்கும். சில ரகசியமான வேலைகளை செய்து முடிப்பீர்கள். உங்களுடைய மனதில் என்ன எண்ணங்கள் தோன்றுகின்றன அதை எப்படி செயல்படுத்துகிறார்கள் என்பதை யாருக்கும் வெளிப்படுத்தாமல் ரகசியமாக விஷயங்களை செய்து முடிப்பீர்கள். உங்களுடைய எதிரிகளுக்கு ஒரு சிம்மசொப்பனமாக இது அமையும்.

உங்களுடைய செயல்கள் எதிரிகளையும் எதிர்ப்புகளையும் தவிடுபொடியாக்கும். தந்தை வழி அனுகூலம் உண்டு. அரசாங்கம் சம்பந்தப்பட்ட இழுபறியில் இருந்த சில விஷயங்கள் இனிதே முடிவடையும். மாதத்தின் முற்பகுதியில் தொழிலில் சில மந்த நிலைமை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு. மாதத்தின் பிற்பகுதியில் அதாவது மார்ச் 1 முதல் நிலைமை படிப்படியாக சீராகும்.


பனிரெண்டாம் இடத்திற்கு அதிபதியான புதன் ஐந்தாம் இடத்தில் இருப்பது குழந்தைகள் மூலம் விரயங்கள் ஏற்படும் என்பதை உணர்த்துகிறது. குழந்தைகளின் உடல் நலத்தில் கவனம் தேவை. நான்காம் இடத்தில் ஆட்சி நிலையில் உள்ள சனி தாயாருக்கு உடல் நலக்குறைவு ஏற்படுத்துவார். அதன் மூலமாகவும் செலவுகள் அதிகரிக்கும். பழைய வீடு, வண்டி இதற்கான ரிப்பேர் செலவுகளும் அதிகரிக்கும். சனியின் மூன்றாம் பார்வை ராசிஅதிபதி மேல் விழுவது சிறிது மந்தத் தன்மையை ஏற்படுத்தும். சோம்பேறித்தனத்தை அறவே நீக்கி விடுங்கள். சனியின் ஏழாம் பார்வை உங்களது பத்தாம் வீட்டில் மேல் படுவதனால் தொழில் இடங்களில் கூட்டாளிகளிடம் கவனம் தேவை. அடுத்தவர்களிடம் உதவி பெறுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள். தானே முன்வந்து உதவுகிறேன் என்று இன்று சொல்வார்கள். பிறகு அவர்களே உங்களுக்கு பிரச்சனைகளையும் ஏற்படுத்துவார்கள். இதுபோன்ற பழக்கவழக்கங்களை ஆரம்பத்திலேயே தவிர்த்துவிடுங்கள்.

ALSO READ  விரைவில் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்கும் சாம்சங் கேலக்ஸி F 22 ஸ்மார்ட்போன்....


துலாமிற்கு யோகாதிபதியான சனி 10-ஆம் இடத்தையும் ராசியையும் பார்ப்பதால் உங்களுடைய கௌரவமும் மதிப்பும் எல்லா இடங்களிலும் அதிகமாகும். பிள்ளைகளுக்கு உரிய கடமைகளை செய்து முடிப்பீர்கள். ஏழாம் இடத்தின் அதிபதியான செவ்வாய் குருவுடன் இணைந்து இருப்பது உங்கள் வாழ்க்கைத் துணையுடன் உங்களுக்கு இருந்த சிறுசிறு பிரச்சனைகள் விலகி உறவு நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெண்கள் மூலம் நன்மைகள் நடக்கும். குடும்பத்திற்கு தேவையான அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வாங்கி முடிப்பீர்கள். வியாபாரம் விருத்தியாகும் அரசியல்வாதிகளுக்கு முன்னேற்றமான மாதம் இது. ஆசிரியர்கள், ஜோதிடர்கள், வக்கீல்கள், வியாபாரிகள் மிகுந்த நன்மை அடைவார்கள். சந்திராஷ்டம நாட்கள் அன்று அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக பயணங்களில் அதிக கவனம் தேவை.

சந்திராஷ்டம நாட்கள்: 1-ம் தேதிமதியம் 1.15முதல் 3-ம் தேதி இரவு 11:03வரை.

ALSO READ  வேகமெடுக்கும்  கொரோனா; படப்பிடிப்புகள் ரத்து !

வழிபட வேண்டிய தெய்வம்:ஸ்ரீனிவாசன்.

இந்த ஜோதிட பலன்களை கணித்தவர் திருமதி. ஜனனி ஸ்ரீதர் (DNA astrologer) . மேலும் சந்தேகங்கள் மற்றும் பலன்களுக்கு astrotamiltalk@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்,

மேலும் காணொளியில் காண: https://bit.ly/2OukP6E


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

வினை தீர்க்கும் விநாயகரை வழிபடும் முறை!!… 

naveen santhakumar

பள்ளிகளை திறக்கலாம் ; கொரோனாவை தடுக்கலாம் – சவுமியா சுவாமிநாதன்…!!!

News Editor

கொரோனா வைரஸை கண்டறியும் கருவியை கண்டுபிடித்தது புனே நிறுவனம்….

naveen santhakumar