ராசி அதிபதி சனிபனிரெண்டாம் இடத்தில் மறைந்து எல்லாவிதத்திலும் விரயங்களையும், விரக்தியையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். எதிலும் ஒரு குழப்ப நிலையும், மனோதிடம் இல்லாத நிலைமையும், தயக்கமும் காணப்படும். எட்டாம் இடத்தின் அதிபதியான புதன் ராசியிலேயே இருப்பது மந்த நிலைமையையும் செயல்திறன் குறையும் நிலையையும் ஏற்படுத்தும். ராசிக்கு யோகாதிபதியான சுக்கிரன் உச்சம் பெறுவது மிக சிறப்பான அம்சமாகும் பெண்களால் தாய் வழி உறவினரால் மிகுந்த நன்மைகள் ஏற்படும். தந்தைவழி அனுகூலமும் உண்டு. ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். வேற்றுமொழி இனத்தவரால் அனுகூலமான நிலை ஏற்படும்.
கடன் பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதால் செலவுகளை திட்டமிட்டு கொள்ளுங்கள். நீங்கள் நம்புபவர்களே உங்களுக்கு எதிரியாக மாறுவார்கள். உங்களின் முதுகுக்குப் பின்னால் பேசுவார்கள் முதுகின் பின்னால் குத்துவார்கள். ஒரு பெரிய குழி வெட்டி வைத்து விட்டு நீங்கள் எப்போது அதில் விழுவீர்கள் என்று காத்துக் கொண்டிருப்பார்கள் எதிலும் கவனத்துடனும் எச்சரிக்கையுடனும் செயல்படுங்கள். மறைமுகமான எதிர்ப்புகளும் இருந்துகொண்டேதான் இருக்கும். அலைச்சலும் அதிகரிக்கும். யோகாதிபதியான சுக்கிரன் வலுப் பெற்று இருப்பது பெரிய பிரச்சினைகள் இருந்தாலும் அதனை நீங்கள் கவலைப்படாமல் கடந்து விடுவீர்கள் என்பதைஉணர்த்துகிறது. தொலைதூரத்திலிருந்து நல்ல செய்தி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
கணவன் மனைவிக்குள் சிறுசிறு சண்டைகள் சச்சரவுகள் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எது எப்படியோ உங்களுக்குள் இருக்கும் பிரச்சனைக்குள் மூன்றாவது நபரை இழுத்து விடாதீர்கள். கண்டிப்பாக சண்டையைபெரிதாகி விட்டுதான் செல்வார்கள். செய்யும் வேலையில் லாபங்கள் சற்று குறைந்து காணப்படும் அல்லது வரவை மீறிய செலவுகள் இருக்கும். நினைத்தது நடக்கவில்லையே என்ற ஒரு கவலை மனதுக்குள் எப்போதும் தொற்றிக் கொண்டே இருக்கும். கடவுள் மீது பாரத்தை போட்டு விட்டு உங்களுடைய பயணத்தை தொடர்ந்து கொண்டே இருங்கள். மூன்றாம் இடத்திற்கும் பதினோராம் இடத்திற்கும் அதிபதியான செவ்வாய் வலுப்பெற்று ஆட்சி நிலையிலுள்ள குருவுடன் இணைந்து இருப்பது உங்களுடைய இளைய சகோதரர் மற்றும் மூத்த சகோதரர்களிடம் நல்ல உறவு நிலை இருக்கும். அவர்களின் மூலம் ஆதாயமும் கிடைக்கும்.
ஐந்தாம் இடத்தில் திருவாதிரையில் பயணிக்கும் ராகு இளைஞர்களுக்கு காதல் தோல்வி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துவார். கவனத்துடன் இருங்கள். மாணவர்களும் படிப்பில் தங்களுடைய சிந்தனை சிதறும் படியான சம்பவங்கள் ஏற்படலாம். கவனத்துடன் இருங்கள். தொலைதூர இடத்திலிருந்து நல்ல செய்தி வரும் அதற்கான வாய்ப்புகள் உண்டு. சோம்பேறித்தனத்தை தள்ளிவைத்துவிட்டு திட்டமிட்டு காரியத்தில் ஈடுபட வேண்டிய மாதமிது.சந்திராஷ்டம நாட்கள் அன்று அனைத்து விஷயங்களிலும் கவனம் தேவை. புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.
சந்திராஷ்டம நாட்கள்: 10-ம் தேதி அதிகாலை 6:20முதல் 12-ம் தேதி அதிகாலை 5:35வரை.
வழிபட வேண்டிய தெய்வம்:ஆஞ்சநேயர்.
இந்த ஜோதிட பலன்களை கணித்தவர் திருமதி. ஜனனி ஸ்ரீதர். மேலும் சந்தேகங்கள் மற்றும் பலன்களுக்கு astrotamiltalk@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்
மேலும் காணொளியில் காண: https://bit.ly/2OukP6E