ஜோதிடம்

மாசி மாத பலன்கள்…சவால்களை ஜெயிக்கும் கன்னி ராசிக்காரர்களே…

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ராசிக்கும் பத்தாம் இடத்திற்கும் அதிபதியான புதன் பன்னிரெண்டாம் இடத்தின் அதிபதியான சூரியனுடன் இணைந்து ஆறாம் இடத்தில் இருப்பது தொழிலில் சிறுசிறு வம்பு சண்டை பிரச்சனைகள் எதிரிகளை சந்திக்க வேண்டிய நிலைமையை ஏற்படுத்தும். மறைமுக எதிரிகளால் தொந்தரவுகள் இருக்கும்.

பத்தாம் இடத்தில் திருவாதிரையில் பயணிக்கும் ராகுவும் ஆட்சி பெற்ற நிலையில் இருக்கும் குரு பார்வையில் இருப்பதனால் எந்த விதமான பிரச்சினைகள் ஏற்பட்டாலும் அதை சமாளிக்கும் திறமையை கொடுப்பார். தொந்தரவுகள் இருந்தபோதும் முன்னேறிக் கொண்டே இருப்பீர்கள்.

ஒன்பதாம் இடத்தின் அதிபதியான சுக்கிரன் உச்சம் பெற்று ராசியைப் பார்ப்பது உங்களுக்கு இது அதிர்ஷ்டமான மாதம் என்பதை உணர்த்துகிறது. மேலும் உச்சம் பெற்ற சுக்கிரன் தந்தைவழி அனுகூலத்தை ஏற்படுத்துவார். அதே சுக்கிரன் உங்களுடைய இரண்டாம் இடத்திற்கும் அதிபதியாக வருவதால் குடும்பத்திலும் சுமூகமான சூழ்நிலை ஏற்படும் அவர்களின் ஆதரவு உங்களுக்கு உண்டு. குழந்தைகள் மூலம் நல்ல மனம் மகிழ்ச்சி அடையும். நான்காம் இடத்தின் அதிபதியான குருவும் ஆட்சி பெற்ற நிலையில் இருப்பது தாய்வழி அனுகூலங்கள் கிடைக்கும். பெண்களால் மிகுந்த நன்மை உண்டு.
முயற்சி ஸ்தானமான 3 ஆம் இடத்தின் அதிபதியான செவ்வாய் நான்காம் இடத்தில் குருவுடன் இணைந்து இருப்பது உங்களுடைய முயற்சிக்கு எவ்வித சிக்கல்கள் வந்தாலும் அந்த சவால்களை ஜெயிப்பீர்கள்.

ALSO READ  மீனுக்காக வீசிய வலையில் சிக்கிய மான்; மீனவர்கள் அதிர்ச்சி…!

எதிர்கால வாழ்விற்கு தேவையான அடிப்படை விஷயங்களை செய்து முடிப்பீர்கள் பிள்ளைகள் வழியில் நல்ல சம்பவங்களும் நல்ல நிகழ்ச்சிகளும் இருக்கும் மாதம் முழுவதும் ராசி அதிபதி 12ஆம் அதிபதியுடன் இணைந்து இருப்பது எல்லாவகையிலும் செலவுகளை அல்லது வீண் விரயங்கள் சுட்டிக்காட்டுகின்றது. பயணங்களில் கவனம் தேவை செலவுகளை கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள்.

ஐந்தாம் இடத்தில் இருக்கும் சனி தன்னுடைய பத்தாம் பார்வையால் இரண்டாம் வீட்டை பார்ப்பது எந்த அளவிற்கு பணவரவு இருக்கிறதோ அதே அளவிற்கு செலவுகளை இழுத்து விடுவார். பிறர் மதிக்க வேண்டும் என்பதற்காகவே செலவுகளை செய்ய வேண்டிய சூழ்நிலையும் கொடுப்பார். இதுபோன்ற செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய மாதமிது. பிற மொழி பேசுபவர்களின் ஆதரவு கிடைக்கும். அவர்கள் மூலம் அனுகூலம் உண்டு.
சந்திராஷ்டம நாட்கள் அன்றுஅணைத்து விஷயங்களிலும் கவனம் தேவை.புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக பயணங்களில் அதிக கவனம் தேவை.

ALSO READ  சட்டப்பேரவையில் தன் பலத்தை கூட்டியது பாஜக !

சந்திராஷ்டம நாட்கள்: 28-ம் தேதிஅதிகாலை மதியம் 1.10முதல் 28-ம் தேதி 1:10வரை.

வழிபட வேண்டிய தெய்வம்: விநாயகர்.

இந்த ஜோதிட பலன்களை கணித்தவர் திருமதி. ஜனனி ஸ்ரீதர் (DNA astrologer) . மேலும் சந்தேகங்கள் மற்றும் பலன்களுக்கு astrotamiltalk@gmail.com என்ற இமெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.

மேலும் காணொளியில் காண: https://bit.ly/2OukP6E


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இங்கிலாந்து பிரதமரின் இந்திய சுற்றுப்பயணம் 2வது முறையாக ரத்து !

News Editor

கண்திருஷ்டி நீங்க வேண்டுமா? நீங்கள் செய்ய வேண்டியவை… 

naveen santhakumar

2020 ஆம் ஆண்டு மிதுன ராசிக்கான சனி பெயர்ச்சி பலன்கள்

Admin