தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புது டெல்லி:
30 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸில் இருந்த அகில இந்திய மகிளா காங்கிரஸ் தலைவர் சுஷ்மிதா தேவ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளார். சுஷ்மிதா தேவ் தனது ராஜினாமா கடிதத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் அளித்துள்ளார்.
சுஷ்மிதா தேவ் தனது கடிதத்தில் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறுவதற்கு எந்த காரணத்தையும் குறிப்பிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பொது சேவையின் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குவதாக சுஷ்மிதா தேவ் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
.
30 ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்த சுஷ்மிதா தேவ் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறியது காங்கிரஸ் கட்சி வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.