மெல்போர்ன்:-
ஆஸ்திரேலிய நாட்டில் கோரோனா தொடர்பான தகவல்களை அளிக்கும் கொரோனா டிராக்கிங்-ஆப் ஒன்றை அறிமுகப்படுத்திய சில மணி நேரங்களிலேயே மில்லியன் கணக்கான மக்கள் அதனை டவுன்லோட் செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதனால் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் ஆஸ்திரேலியா பெரிய அளவில் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை. அதேபோல ஆஸ்திரேலியாவை சுற்றி அமைந்துள்ள ஓசேனியா பகுதியைச் சேர்ந்த தீர்வுகளும் இதுவரை பாதிக்கப்படவில்லை.
இந்நிலையில் கொரோனா தொடர்பான தகவல்களை உடலுடன் பெறுவதற்காக COVIDSafe என்ற மொபைல் செய்தியை ஆஸ்திரேலியா அறிமுகப்படுத்தியுள்ளது.
அறிமுகப்படுத்திய சில மணி நேரங்களிலேயே இந்த செய்தி 2 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் டவுன்லோட் செய்துள்ளனர். இது மொத்த மக்கள்தொகையில் 20% என பிரிய சுகாதாரத்துறை அமைச்சர் கிரேக் ஹண்ட் (Greg Hunt) தெரிவித்துள்ளார்.
இந்த மொபைல் செயலி தனிநபரின் பாதுகாப்புக்கு (Privacy) முழு உத்தரவாதம் அளிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.