தேங்காய் மிகச்சிறந்த உணவு பொருள். தேங்காய்பால் தாய்ப்பாலுக்கு நிகராக கூறப்படும் ஒன்று.
தேங்காய் கலாச்சாரத்தில் முக்கியமான ஒன்று அனைத்து சுப விசேஷங்கள் மற்றும் கோயில் விசேஷங்கள் அனைத்திலும் இடம்பெறுவது தேங்காய்.
பொதுவாக தேங்காயை உடைத்து 15நிமிடத்திற்குள் உண்ண வேண்டும் அப்போதுதான் நீர்மக் கொழுப்பு (LIQUID FAT) நம்மை வந்து அடையும். கொழுப்பு தான் நல்ல கொழுப்பு எனப்படும் Good Colostral). ஏனெனில் தேங்காயில் இருப்பது நிறைவுறா கொழுப்பு (Unsaturated Fat) ஆகும்.
தேங்காய் ஆண்களின் விந்தணுக்களை பாதுகாக்கிறது (Protects the sperm cells). எவ்வாறு தேங்காய் ஆண்களின் விந்தணுக்களை பாதுகாக்கிறது??
முன்னல்லாம் கோவில்களில் தேங்காய் உடைத்ததும் போட்டி போட்டு கொண்டு எடுப்பார்கள் இதற்குத்தான் என்று தெரியாமலேயே. இப்போதெல்லாம் யாரும் கோயிலில் உடைக்கும் தேங்காய்களை போட்டிபோட்டுக்கொண்டு எடுப்பதில்லை ஏனெனில் கவுரவம் தடுக்கிறது இதற்குப் பின்னால் ஜோதிடமும் இருக்கிறது. அது, என்னவென்று பார்க்கலாம்.
பெரும்பாலும் தேங்காய் உடைப்பது விநாயகர்-க்கு தான் அதிகம். விநாயகர் கேதுவின் அதிபதி. கேதுவிற்கு உரியது அஸ்வினி எனும் குதிரை தேவதை.
எனவேதான் பிள்ளையாருக்கு உடைக்கும் தேங்காயில் குதிரை சக்தி (Horse power) உள்ளது. இதன் காரணமாகத்தான் ஆண்களின் வீரியத்தை அதிகரிப்பதாக ஜோதிடம் கூறுகிறது. இவை எல்லாமே குதிரையை தனது நட்சத்திர விலங்காக கொண்ட அஸ்வினி எனும் கேதுவின் நட்சத்திரத்தில் உள்ளது.
மேலும் தேங்காயை காய வைத்து, கொப்பரை ஆக்கி அதை ஆட்டி எண்ணெய் எடுத்து தலைக்கு தேய்க்க முடி அடர்த்தியாக வளரும். இதில் கேசம் கேது காரகம். பொதுவாகவே கேது முகப்பொலிவு மற்றும் சரும சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை தீர்க்கும். இதை தேங்காயோடு ஒப்பிட்டீர்களானால் முகப்பொலிவு, தோல் பளபளப்பிற்கு தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெய் பயன்படும்.
பொதுவாக ராகு கேது ஏதோ கெட்ட கிரகங்கள் போன்று காலம் காலமாக நமக்கு கற்பிதங்கள் சொல்லப்படுகிறது ஆனால் உண்மையில் கேது நமக்கு ஞானத்தையும் ராகு நமக்கு ஆசையையும் வழங்கும்.