ஷில்லாங்:-
மேகாலயா அரசாங்கம் வீட்டுக்கே சென்று மது வினியோகம் (Home Delivery) செய்ய முடிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். அவர்களில் சிலரின் உடல்நலனை கருத்தில் கொண்டு அத்தியாவசியமாக தேவைப்படும் நபர்களுக்கு மது விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இதனை ஒரு தற்காலிக ஏற்பாடாக பதிவு செய்யப்பட்ட மருத்துவர்களின் பரிந்துரையினை பெற்றவரோரின் வீடுகளுக்கே சென்று மது விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதேபோல் மது கிடங்குகளும் நேரடியாக மருத்துவரின் பரிந்துரை உள்ளவர்களுக்கு விற்பனை செய்யலாம் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால், மருத்துவரின் பரிந்துரை இல்லாத எந்த நபருக்கும் கட்டாயம் மது விற்பனை செய்ய கூடாது என்று கலால் துறை துணைச் செயலாளர் B சைய்ம்லே (B Syiemlieh) தெரிவித்துள்ளார்.
இதனிடையே கேரள முதல்வர் பினராயி விஜயனும் முன்னரே இதேபோன்று மருத்துவரின் பரிந்துரை பேரில் வருபவர்களுக்கு மது விற்பனை செய்யலாம் என்று கூறியிருந்தார்.
ஆனால் தங்களால் அதுபோன்று மதுவிற்காக மருத்துவ பரிந்துரைகள் செய்ய முடியாது என்று மருத்துவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.