பியோங்யாங்:-
உலகமுழுவதும் கொரோனா வைரஸ் பீதியில் செய்வதறியாது திகைத்து வரும் நிலையில் வடகொரியா 2 ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது.
வடகொரிய தலைநகரான பியோங்யாங் (Pyongyong) மாகாணத்தின் சன்சோன் (Sonchon) பகுதியில் குறைந்த தூரம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது. இந்த சன்சோன் பகுதி கொரிய தீபகற்பத்தில் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ளது.
இந்த ஏவுகணை சோதனை நடந்த சில மணி நேரங்களுக்குப் பிறகு வடகொரியாவின் சுப்ரீம் பீப்ள் அசம்ப்ளியில் (Supreme People’s Assembly) அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
இந்த ஏவுகணை சோதனை குறித்து தென்கொரிய ராணுவ தலைமை அதிகாரி கூறும்பொழுது:-
உலகம் முழுவதும் கொரோனா பரவல் தடுக்க முடியாமல் தவித்து வரும் நிலையில் வடகொரியாவின் இந்த ஏவுகணை தாக்குதல் கொரிய பிராந்தியத்தில் மேலும் பதற்றத்தை அதிகப்படுத்தியுள்ளது. வடகொரியா உடனடியாக இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் என்றார்.
இந்த ஏவுகணை சோதனை நேற்று காலை 6:30 மணி முதல் 7 மணி அளவில் நடைபெற்றதாக தெரிகிறது. இந்த சோதனையில் வடகொரியாவில் முழுவதுமிருந்து 700 உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மேலும் கொரோனா பரவலுக்கு இடையில் தனது இராணுவ வலிமையை காட்டுவதற்காக வடகொரிய அதிபர் கிம் இத்தகைய சோதனை செய்து உள்ளதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.