புதுடில்லி:
காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி 19 எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனையில் வீடியோ கான்பெரென்ஸ் மூலம் ஈடுபட்டார்.
இந்த வீடியோ கான்பெரென்ஸ் நிகழ்வில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின், மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் டி.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் இப்போதிருந்தே தயாராக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு விடுத்துள்ளார். 2024 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதே எதிர்க்கட்சிகளின் முக்கிய இலக்காக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
2024-ம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வை வீழ்த்தும் நோக்கில், வலுவான கூட்டணியை அமைக்க எதிர்க்கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
இந்நிலையில், கூட்டணி அமைக்கும் முயற்சியாகவே காங்கிரஸ் தலைவர் சோனியா 19 எதிர்க்கட்சித் தலைவர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.