ஸ்ரீரங்கம்:-
திருச்சியில் பிரபல ரவுடியின் தலையை வெட்டி காவல் நிலையத்தின் வீசிய கும்பலால் பரபரப்பு.
திருச்சி ஸ்ரீரங்கம் பகவதி அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் சந்திரமோகன் (45). இவர் திருச்சியின் பிரபல ரவுடி ஆவார் இவர் தலைவெட்டி சந்துரு என்று பட்ட பேரில் அழைக்கப்படுவார். இவர் திருச்சி பகுதியில் பல்வேறு கொலை வழக்குகள் இவர் மீது உள்ளது.
இவர் பால்காரர் ஒருவரின் தலையை வெட்டி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வீசி சென்றதால் இவருக்கு தலைவெட்டி சந்துரு என்ற பட்டப் பெயரில் அழைக்கப்பட்டார். மேலும் இவர் திமுக கட்சியை சார்ந்தவர். இவர்உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற நிர்வாகியாகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு இவருக்கும் திருச்சியை சேர்ந்த சரவணன் என்பவருக்கும் ஏற்பட்ட தகராறு காரணமாக சரவணனை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த சரவணன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்துள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் தனக்கு எதிராக சாட்சி கூற கூடாது என்று சரவணனை ரவுடி தலைவெட்டி சந்துரு மிரட்டியுள்ளார், மீறி சாட்சி கூறினால் கொலை செய்து விடுவேன் என்று கூறியுள்ளார்.
இதனால் கடும் ஆத்திரமடைந்த சரவணன் தனது தம்பி சுரேஷ் மற்றும் நண்பர் செல்வகுமார் உடன் இணைந்து சந்துருவை கொல்ல சதி திட்டம் தீட்டி உள்ளார்கள். இன்று காலையில் ஸ்ரீரங்கம் ரயில்வே மேம்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த சந்துருவை எதிரே காரில் வந்த இவர்கள் சந்துருவின் மீது காரை மோதச் செய்து அவர் கீழே விழுந்ததும் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
வெட்டிய பின்னர் தலைவெட்டி சந்த்ருவின் தலையை வெட்டி தனியே எடுத்துக் கொண்ட ஸ்ரீரங்கம் காவல் நிலையம் சென்று நாங்கள் சந்துருவை கொலை செய்து விட்டோம் என்று சரணடைந்துள்ளனர். காலை நேரத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.