நாம் அனைவரும் அடிக்கடி ஏதேனும் கஷ்டங்கள் வந்தாலோ அல்லது வேறு பிரச்சனைகள் வந்தாலோ, எல்லாம் முன் ஜென்ம பாவம் என்று பலர் சொல்ல கேட்டிருப்போம்.
சரி, அதுபோல் பாவங்கள் இருந்தால் தீர்ப்பது எப்படி???
இதோ அதற்கான எளிய பரிகாரங்கள்:-
பசுவிற்கு வெல்லம், அகத்திகீரை, வாழைப்பழம் கொடுக்கலாம்.
தினமும் காலை அல்லது மதியம் காகத்திற்க்கு உணவு படைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்ஜென்ம பாவங்கள் குறையும்.
அமாவாசை விரதம் கட்டாயம் இருக்க வேண்டும். மேலும் எள், தண்ணீர் வைத்து முன்னோர்களை வழிபட்டால் அவர்கள் ஆசியை பெறலாம்.
நமது முன்ஜென்ம வினைகள் குறைய சண்டிகேஷ்வரனை வணங்க வேண்டும். தவிர,சண்டிகேஷ்வரனை வேண்டி அன்னதானம் செய்யலாம்.
குலதெய்வ கோவில்களுக்கு சென்று வழிபடலாம்.
கோயில்களுக்கு சென்று இஷ்ட தெய்வங்களை மனதார வழிபடலாம்.
வீட்டின் பூஜை அரையில் குலதெய்வத்தை வேண்டி மூன்று மூன்றாக அரசமர இலைகளை வைத்து அதில் உப்பையும், உதிரிபூக்களையும் போட்டு 9 அகல் விளக்குகள் ஏற்றி மனதார வழிபட்டால் பூர்வஜென்ம பாவங்கள் அகலும்.