தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:-
சென்னையில் நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தைச் சேர்ந்த 2 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒருவர் ரைட்டர் எனவும், மற்றொருவர் உளவுத்துறை காவலர் பாதிக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் காவல் நிலையம் மூடப்பட்டு , அதனை சுற்றி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. அந்த காவல் நிலையத்தில் பணியாற்றும் அனைத்து காவலர்களுக்கும் கொரோனா சோதனை செய்யப்பட இருக்கிறது. சென்னையில் மட்டும் 5 காவலர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக கோயம்புத்தூரில் 6 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து அவர்கள் பணியாற்றிய போத்தனூர் காவல் நிலையம் மூடப்பட்டது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.