கோரக்பூர்:-
உத்தரபிரதேசத்தில் கொரோனா நோயாளிகளுக்கு உதவும் வகையிலும் தனிமனித இடைவெளியை பேணும் வகையிலும் ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்கு கூடிய ரோபோ ட்ராலிகள் (Robotic Trolley) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள லலித் நாராயண் மிஸ்ரா ரயில்வே மருத்துவமனையில் (Lalit Narayan Mishra Railway Hospital) கோரோனா வார்டுகளில் உள்ள நோயாளிகளுக்கு மருந்து பொருட்களை வழங்குவதற்கு ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயங்க கூடிய ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தொடங்கிவைத்தார் மேலும் கோரக்பூர் ரயில்வே மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு உள்ள படுக்கைகள் மற்றும் இதர வசதிகள் குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் கோரக்பூரில் கடும் மழை காரணமாக வெள்ள சேதம் ஏற்பட்டுள்ளது. இதனையும் முதல்வர் எழுதிய ஆதித்தியநாத் ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு செய்தார் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.