தமிழகத்தில் 23 மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகள் 120 நகர கூட்டுறவு வங்கிகள் விவசாயிகளுக்கு தேவையான கடன்களை வழங்கும் 4 ஆயிரத்து 450 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் நீண்ட கால கடன்களை வழங்கும் 180 தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகள் 115 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு கடன் வழங்க 1729 பணியாளர் கூட்டுறவு சங்கங்கள் தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி என தமிழகத்தில் பல அடுக்குகளாக கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன.
கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் பயிர் கடனுக்கு வட்டி கிடையாது சுய உதவி குழுக்களுக்கு 4 சதவீத வட்டி மட்டுமே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் கடனுக்கு வட்டி 6 சதவிகிதம் மாற்றுத்திறனாளிகளுக்கு தரப்படும். கடனுக்கு வட்டி கிடையாது.
விவசாய நிலங்களுக்கு பயிர் காப்பீடு செய்து காப்பீட்டு தொகையை பெற்றுக் கொடுப்பது கூட்டுறவு நிறுவனங்கள் தான் சிறு வியாபாரிகளுக்கு சிறப்பு கடன் வழங்கப்படுகிறது
‘ தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளின் மூலமாக கிணறு வெட்ட டிராக்டர் வாங்க கடன் கொடுக்கப்படுகிறது வீடு கட்டவும் கடன் வழங்கப்படுகிறது சொந்த நிலம் இல்லாமல் குத்தகை நிலங்களில் விவசாயம் செய்பவர்களுக்கு கடன் வழங்கும் திட்டங்கள் இருக்கின்றன
மற்ற வங்கிகளில் தரப்படும் பெரும்பாலான கடைகள் கூட்டுறவு வங்கிகளில் தரப்படுகின்றன ஆனால் மற்ற எல்லா வங்கிகளிலும் கூட்டுறவு வங்கிகளில் வட்டி மிக மிக குறைவு
அதேபோல முதலீட்டுக் கடன் அதாவது விவசாய உற்பத்திப் பொருட்களை பெற்றுக் கொண்டு கடன் வழங்கும் திட்டம் கூட்டுறவு வங்கிகளில் மட்டுமே இருக்கிறது .