தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
நடிகர் சூர்யா, தனது அகரம் ஃபவுண்டேசன் சார்பாக மாணவர்களின் கல்விக்கு உதவி வருகிறார்.தமிழகத்தில் 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பை சூர்யா கடுமையாக எதிர்த்தார்.
இந்நிலையில் தற்போது 5 ஆம் வகுப்பு, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வை அரசு ரத்து செய்துள்ளது. இதனையடுத்து சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், படிக்கும் வயதில் இடைநின்ற மாணவர்களை மீண்டும் கல்வியோட்டத்தில் இணைப்பது எத்தனை கடினமானதென்று அகரம் தன் களப்பணிகளில் உணர்ந்திருக்கிறது.
மாணவர்களின் கற்றல் திறனை அளவிடுவதற்கு பொதுத்தேர்வு என்றும் தீர்வாகாது. 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. கல்வி அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும் நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.