சினிமா

விஜய் கொடுத்த வாய்ப்பை வீணடித்த பிரபல இயக்குநர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தனது படத்தில் நடிக்க நடிகர் விஜய் விருப்பம் தெரிவித்ததாகவும்,ஆனால் அதனை தான் தவற விட்டு இன்றளவும் வருந்துவதாகவும் நடிகர் சேரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்சினிமாவில் எவர்கிரீன் இயக்குநர்களில் ஒருவராக திகழ்ந்தவர் இயக்குநர் சேரன். 2000க்கும் பின் நடிகராக மாறிய சேரன் அதிலும் தன் முத்திரையை பதித்தார். இதன்பிறகு கடந்த சீசனில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார்.

சமீபத்தில் சேரன் நடிப்பில் வெளியான ‘ராஜாவுக்கு செக்’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

ALSO READ  சிக்கன் பிரியாணி ரூ.50, மட்டன் பிரியாணி ரூ.100 - பிரியாணி கடையில் தள்ளுமுள்ளு

இந்நிலையில் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், சினிமாவில் தான் செய்த தவறுகளில் விஜயை இயக்க அவர் கொடுத்த வாய்ப்பை தான் தவறவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் என் கதைக்கு ஓ.கே. சொல்லி தேதி கொடுத்தார். ஆனால் அந்த சமயத்தில் நான் ‘தவமாய் தவமிருந்து’ பட வேலைகளில் இருந்ததால் அந்த வாய்ப்பு தவறி விட்டதாக தெரிவித்துள்ளார். சேரன் நடித்த தவமாய் தவமிருந்து படம் அவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

சத்குருவுடன் சமந்தா ஆன்மிக சந்திப்பு !

News Editor

இந்திய ராணுவத்தின் புதிய Tour Of Duty திட்டத்திற்கு பிரணிதா பாராட்டு…

naveen santhakumar

‘நான் திருமணம் செய்து கொள்ளவில்லை’ ரசிகருக்கு பதிலளித்த சனம்..!

News Editor