சினிமா

செல்வராகவனுடன் இணைவதில் அளவில்லா ஆனந்தம் : தயாரிப்பாளர் தாணு மகிழ்ச்சி..!

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியான படம், ‘ஆயிரத்தில் ஒருவன். சோழ வரலாற்றுப் பின்னணியைக் கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம், வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவுக்குச் செல்லவில்லை என்றாலும், இன்றளவும் சினிமா ரசிகர்களால் வெகுவாகக் கொண்டாடப்படும் படமாக இருக்கிறது. 


அதனையடுத்து ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிவந்தன. இந்நிலையில் இயக்குனர் செல்வராகவன்தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து ட்வீட் செய்துள்ளார். அதில்,”தனுஷ் நடிப்பில் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் 2024-ல் வெளியாகும்” என்று, அப்படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். அதனையடுத்து இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் படத்தின் இயக்குனர் செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் இன்றுமுதல் ’ஆயிரத்தின் ஒருவன் 2’ பட வேலைகளை துவங்கியுள்ளதாக அதில் பகிர்ந்துள்ளார்.

ALSO READ  நியாயமற்ற அநீதிக்கு எதிராக நிற்கிறான் கர்ணன்; படத்தை பாராட்டிய ஐ.பி.எஸ் அதிகாரி !

அதனை தொடர்ந்து தயாரிப்பாளர் தாணு செல்வராகவனின் பதிவை ரீடுவிட் செய்து  “என்றும் மக்களின் உள்ளத்தில் நிலைத்து நிற்கும் காவியங்களைப் படைத்த பெருமைக்குரிய இயக்குநர் செல்வராகவன் அவர்களுடன் முதல் முறையாக இணைவதில் அளவில்லா ஆனந்தம்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

#aayirathiloruvan2 #dhanush #selvaraghavan #Tamilthisai


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

அதிக நிதி கொடுத்தது ரஜினியா? விஜயா?:: குடிபோதையில் ரசிகர்கள் வாக்குவாதம்- ஒருவர் கொலை….

naveen santhakumar

‘அந்தகன்’ பட டைட்டில் போஸ்டர் வெளியீடு..!

News Editor

இயற்கை இருக்கும் வரை நீ வாழ்ந்து கொண்டுதான் இருப்பாய்; நடிகர் செந்தில் !

News Editor