சென்னை:-
பிரபல நடிகரும் இயக்குனருமான அர்ஜுனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஐஸ்வர்யா வெளியிட்ட இன்ஸ்டாகிராம் பதிவில்:-
“சமீபத்தில் எனக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. நான் வீட்டுத் தனிமையில், மருத்துவர்களின் ஆலோசனையின்படி தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளேன்.
கடந்த சில நாட்களாக என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் யாராக இருந்தாலும், உங்களைக் கவனித்துக் கொள்ளுங்கள். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். தயவுசெய்து முகக்கவசம் அணியுங்கள். நல்ல ஆரோக்கியத்துடன் விரைவில் உங்களைச் சந்திக்கிறேன். அன்புடன், ஐஸ்வர்யா அர்ஜுன்” என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக, நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் சகோதரியின் மகன் சிரஞ்சீவி சார்ஜா கடந்த மாதம் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவரது தம்பியும் நடிகருமான துருவா சார்ஜா மற்றும் அவரது மனைவிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.