சினிமா

மாரி செல்வராஜ், பா ரஞ்சித் மற்றும் த்ருவ் விக்ரம் கூட்டணியில் உருவாகும் படத்தின் அறிவிப்பு வெளியாகியது 

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மாரி செல்வராஜ் இயக்கத்தில் த்ருவ் விக்ரம் நடிப்பில் பா ரஞ்சித் தயாரிக்கும் புதிய படத்தின் தகவல் உறுதியாகிவிட்டது.


மாரி செல்வராஜ் தற்போது நடிகர் தனுஷை வைத்து “கர்ணன்” என்ற படத்தினை இயக்கிவருகிறார். இந்த படத்தில் ராஜீஷா விஜயன், லால், யோகிபாபு உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர்.  கர்ணன் படத்தினை தாணு தயாரித்து வருகிறார். படத்தின் அணைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிந்துள்ள நிலையில் படக்குழு படத்தின் இறுதி கட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.


அதனை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் நடிகர் த்ருவ் விக்ரம் நடிக்கும் படத்தினை இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கவுள்ளதாகவும், அந்த படத்தினை இயக்குனர் பா ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்சன் தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான “பரியேறும் பெருமாள்” திரைப்படத்தினை பா ரஞ்சித் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ  ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் ஜீவன் நடிக்கும் படம் :


இந்த நிலையில் தான் மாரி செல்வராஜ் த்ருவ் விக்ரமை வைத்து இயக்கவிருக்கும் படம் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்க இருப்பதாகவும்  தகவல் வெளியாகியுள்ளன. மாரி  செல்வராஜ் “கர்ணன்” படத்தின்  அணைத்து பணிகளையும் முடித்தவுடன் புதிய படத்திற்கான தகவல் வெளியாகும்  என அறியப்படுகிறது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஹாலிவுட் வரை ஹிட்டடித்த மாஸ்டர் ‘குட்டிக்கதை’ பாடல்

Admin

அமெரிக்காவின் இளம் வயது ராப் பாடகர் மரணம்

Admin

தொடர்ந்து OTT-யில் மண்ணைக்கவ்வும் படங்கள்….வருத்தத்தில் கீர்த்தி சுரேஷ்…

naveen santhakumar