இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது.
தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகளவில் பரவி வருகிறது. வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது.
மேலும் ஊரடங்கு காலத்தில் மக்கள் வெளியில் வராமல் இருப்பதற்கும், முகக்கவசம், தடுப்பூசி போன்றவைகளுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் வரை பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில், காமெடி நடிகர் கவுண்டமணி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “கோவிட் ஒரு சாதாரண நோய் அல்ல. எனக்கு முன்னால் மக்கள் இறப்பதை நான் காண்கிறேன். தயவுசெய்து உள்ளே தங்கி தடுப்பூசி அல்லது ஏதேனும் அவசர நிலைக்கு மட்டும் வெளியே வாருங்கள் ” எனக் குறிப்பிட்டுள்ளார்.