நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான பூமி திரைப்படத்தின் கலவையான விமர்சனத்தை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து நடிகர் ஜெயம் ரவி இயக்குநர் மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்நிலையில் இவரின் அடுத்த படம் குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
இப்படத்தை ஆண்டனி பாக்கியராஜ் இயக்கும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இவர் விஸ்வாசம், இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களில் கதைகளில் பணியாற்றியுள்ளார். தற்போது இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகவுள்ளார். வித்தியாசமான கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்படவுள்ள இப்படத்தை ஹோம் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படம் நடிகர் ஜெயம் ரவியின் 29 வது படமாக உருவாக்க உள்ளது.
நடிகர் ஜெயம் ரவி பொன்னியின் செல்வன் படத்தில் கவனம் செலுத்தி வருவதால் அப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு இப்படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
#Tamilcinema #TamilThisai #Tamilmovie #JeyamRavi #Antonybhagyaraj #Tamilcinema #JayemaRavi #Bhoomi #Viswasam #Hero #Irumbuthirai