மலையாள சினிமா துறையில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நஸ்ரியா தமிழில் நேரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதனையடுத்து இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘நய்யாண்டி’ படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார். இப்படத்தில் இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் வெளியாகி இளைஞர்கள் மத்தியில் நஸ்ரியாவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்ட தோடு அனைத்து தமிழ் சினிமா ரசிகர்களும் நஸ்ரியாவின் தீவிர ரசிகையாக மாறிப் போனார்கள்.
இதனையடுத்து கடந்த 2014ஆம் ஆண்டு நடிகை நஸ்ரியா பிரபல மலையாள நடிகர் பஹத் பாசிலை திருமணம் செய்து கொண்டார். அதனையடுத்து சில வருடங்கள் நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்த நஸ்ரியா கடந்த ஆண்டு வெளியான ‘டிரான்ஸ்’ என்ற மலையாள படத்தின் மூலம் மீண்டும் சினிமா துறைக்கு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.
இந்நிலையில் நடிகை நஸ்ரியாவின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இயக்குனர் விவேக் ஆத்ரேயா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் நடிப்பதன் மூலம் தெலுங்கு சினிமாவில் முதல் முறையாக கதாநாயகியாக அறிமுகமாக உள்ளார் நஸ்ரியா. ரொமான்டிக் காமெடி படமாக தயாராகும் இப்படத்திற்கு அண்டி சுந்தரினிகி என பெயரிடப்பட்டுள்ளது. தெலுங்கு மலையாளம் என இரு மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இப்படம் தொடர்பாக நடிகை நஸ்ரியா தனது ட்விட்டர் பகிர்ந்துள்ளார், அதில்,“முதலாவது எப்போதுமே ஸ்பெஷல். அதனால் இந்தப் படமும் எனக்கு ஸ்பெஷல் தான்” எனக் குறிப்பிட்டுள்ளார்.