இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்து வருகிறது.
குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
அண்மை காலமாக கொரோனா தொற்றால் திரைப்பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இறந்து வருகின்றனர். அந்தவகையில் நடிகர் பாண்டு தற்போது கொரோனாவால் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா தொற்று காரணமாக நடிகர் பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி நடிகர் பாண்டு காலமானார். அவரது மனைவி குமுதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்திருக்கும் பாண்டு கேப்பிடல் லெட்டர்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதன் மூலம் திரைப்பிரபலங்கள் முதல் பல அரசியல் தலைவர்களின் இல்லங்களுக்கு கதவுகள் வடிவமைத்து கொடுத்துள்ளார்.தற்போது இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.