சீனாவில் இருந்து தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமான எண்ணிக்கையில் தொற்று இருந்து வந்த நிலையில், பின்னர் இந்தியா முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வந்தது. ஆனால் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், சமீபத்தில் நகைச்சுவை நடிகர் பக்ருவிற்கு உடல்நல குறைவு ஏற்பட்டது, அதனையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நடிகர் பக்ரு சிகிச்சை பின் உடல் நலம் தேறி தற்போது தன வீட்டில் தனிமை படுத்தி கொண்டார்.
இந்நிலையில் நடிகர் பக்ரு வீடியோ ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “இறுதியில் எனக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுவிட்டது. மருத்துவமனையில் எடுத்துக்கொண்ட சிகிச்சைக்குப் பிறகு, முழுமையாக குணமடைந்து விட்டேன். தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறேன். விரைவில் வேலைகளில் கவனம் செலுத்துவேன். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள். தடுப்பூசி எடுத்துக்கொள்ளுங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.