சினிமா

அதிக பொருட்செலவில் உருவாகும் பாகுபலி நாயகனின் அடுத்த படம் :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பாகுபலி நடிகர் பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் மது குருசாமி, இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக சலார் படத்தின் படப்பிடிப்பு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.

ALSO READ  ஐரோப்பா செல்லும் வலிமை படக்குழு :

கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருந்த இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளதாம். மேலும் இப்படத்தில் ஒரே மாதத்தில் நடித்து முடிக்க பிரபாஸ் திட்டமிட்டுள்ளாராம். ஆகஸ்ட் மாதம் முதல் ஆதிபுருஷ் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரு படங்களும் பான்-இந்தியா படங்களாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

டாப் டக்கரு தீபிகா படுகோண்

Admin

சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு

Admin

‘காஞ்சனா 3’ பட நடிகை திடீர் மரணம் – காரணம் என்ன?

naveen santhakumar