இயக்குனர் பன்னீர்செல்வம் இயக்கத்தில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான ரேணிகுண்டா படத்தின் மூலம் தீப்பெட்டி கணேசன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த தீப்பெட்டி கணேசனின் நடிப்பு பெரிதளவு பேசப்பட்டது. அதனையடுத்து நடிகர் அஜித் நடிப்பில் வெளியான பில்லா 2, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தென்மேற்கு பருவக்காற்று, நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா போன்ற படத்திலும் நடித்துள்ளார்.
அதனையடுத்து படவாய்ப்புகள் வராததால் வேறு பல குறுந்தொழில்கள் செய்து வந்தார். கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் வறுமையில் வாடிய அவர் கையில் பால் வாங்கக்கூட பணம் இல்லை என்று வீடியோ ஒன்றை பதிவிட்டுருந்தார். அதனை பார்த்த திரைபிரபலங்கள் அவருக்கும் உதவிக்கரம் நீட்டினார்கள்.
அதனையடுத்து உடல் நலக்குறைவு காரணமாக ராஜாஜி மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டு சிக்கிசை பெற்று வந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை அன்று சிகிச்சை பலனின்றி தீப்பெட்டி கணேசன் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து இவரின் மறைவிற்கு திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்தனர்.
இந்நிலையில் மறைந்த தீப்பெட்டி கனேசனின் இரண்டு குழந்தைகளின் கல்வி செலவை ராகவா லாரன்ஸ் ஏற்று கொள்வதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், “தீப்பெட்டி’ கணேசன் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியைக் கேள்விப்பட்டு மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். இவ்வருடம் அவரின் பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை நான் ஏற்றுக்கொண்டு செய்தேன், இனி வரும் காலத்திலும் என்னால் இயன்ற வறையிலான உதவிகளை அவரின் குழந்தைகளுக்கு செய்வேன். கணேசனின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன்” என்றார்.
#RaghavaLawrence #TamilThisai #Tamilcinema #Tamilmovie #TheepettiGanesan #TamilFilmActor #Cinematrending #CIneUpdate #CinemaNews