நடிகர் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத உச்ச நட்சத்திரமாக திகழ்கிறார். இந்திய சினிமாவுக்கு இவர் அளித்த பங்களிப்பை பாராட்டி இவருக்கு மத்திய அரசின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் திலகம் சிவாஜி கணேசன், இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்குப் பிறகு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து நடிகர் ரஜினிக்கு நாட்டின் பிரதமர் மோடி, அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினி தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் ட்வீட் செய்துள்ளார். அதில், “புகழ் பெற்ற அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், சக நண்பர்கள், பத்திரிகை துறையினர் மற்றும் எனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.
#DhadhaShakibPhalkeAward #Rajinikanth #rajinikanth #Superstar #Annaththe #TamilThisai #Cinema #CinemaTrending #TamilNadu #Rajini #kamalhassan #Cinemanews #Mammootty