நடிகர் சிம்பு தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருகிறார் இவரது நடிப்பில் பொங்கல் அன்று சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகிய ஈஸ்வரன் படம் தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அதனையடுத்து இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் “மாநாடு” படத்தையும், இயக்குனர் கிருஷ்ணன் “பத்து தல” படத்தையும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் நடிகர் சிம்பு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியது. தற்போது அதனை உறுதி செய்துள்ளார் நடிகர் சிம்பு. அதனையடுத்து இவர்கள் கூட்டணியில் உருவாகும் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக அந்நிறுவனத்தின் அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்தில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இவர்கள் கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதனைத் தொடர்ந்து அச்சம் என்பது மடமையடா படமும் வெளியாகி விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது இந்நிலையில் தற்போது இந்த ஜோடி 3வது முறையாக சேர்ந்திருப்பது இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பை கூட்டுகிறது.
மேலும் இந்த படத்தின் முதற்கட்ட பணிகளை முழுவீச்சில் நடந்து வருவதாக தயாரிப்பு தரப்பில் இருந்து கூறப்படுகிறது தற்போது சிம்பு நடித்துவரும் “மாநாடு” மற்றும் “பத்துதல” படத்தின் பணிகள் முடிந்தவுடன் இந்த படத்தில் நடிகர் சிம்பு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது மேலும் மற்ற கதாபாத்திரத்திற்கான தேர்வு நடந்து வருவதாகவும் அதனை இறுதி செய்தவுடன் படத்தின் பணிகளை தொடங்கவுள்ளதாக படக்குழு கூறியுள்ளது.
#gauthammenon #simbu #paththuthala #maanaadu #silambarasan #str #tamilcinema #tamilmovie #tamilthisai