நடிகர் சோனு சூட் சமூக வாழ்க்கையில் மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா பரவல் அதிகமாக இருந்த காலகட்டத்தில் மக்களுக்கு எண்ணற்ற உதவிகளை செய்தவர். அதனால் பல பேர் இவரை ரியல் ஹீரோவாக பார்த்து வருகின்றனர் இன்னும் சில பேர் ஒரு படி மேலே சென்று அவருக்கு கோவில் கட்டி வணங்கி வருகின்றனர்.
இப்படிப்பட்ட பல மக்களின் துயரைத் நீக்கியுள்ளார் நடிகர் சோனு சூட். இந்த நிலையில் தெலுங்கில் கொரடலா சிவா இயக்கத்தில் நடிகர் சிரஞ்சீவி நடிக்கும் “ஆச்சாரியா” படத்தில் சோனு சூட் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படப்பிடிப்பிற்கு வந்தபோது அவருக்கு சிரஞ்சீவி பெரும் வரவேற்பினை அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து நடிகர் சோனு சூட் தனது ட்விட்டர் பக்கத்தில், “சந்தேகத்திற்கிடமின்றி நான் பணியாற்றியதிலேயே அருமையாகவும் மற்றும் பணிவான நடிகர்களில் ஒருவர்” என்று சிரஞ்சீவியை புகழ்ந்து பதிவிட்டிருந்தார்.
அந்தப் பதிவுக்கு நடிகர் சிரஞ்சீவி பதில் அளிக்கும் விதமாக அவருடைய ட்விட்டை குறிப்பிட்டு, “நன்றி சோனு சூட், நல்ல மனிதர்களில் ஒருவர் நீங்கள், ஏழைகளுக்கு உதவும் உங்கள் அற்புதமான பணியை தொடர்ந்து செய்வதோடு இன்னும் தொடர்ந்து லட்சக்கணக்கான மக்களை நீங்கள் ஊக்கப்படுத்துங்கள், அதற்கான சக்தி உங்களுக்கு கிடைக்கட்டும் உங்கள் தங்கமான மனதிற்கு அனைத்தும் உங்களுக்கு கிடைக்கும்,” என்று தெரிவித்துள்ளார் தற்போது இந்த பதிவுகளை இருவருடைய ரசிகர்களும் சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்