தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
அரசாங்கம் நியாய விலை கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு நிதி உதவிகள் வழங்கி வருகிறது. திரைப்படத்துறை முடங்கியுள்ளதால் ஃபெப்சி நிதி திரட்டி சினிமா தொழிலாளர்களுக்கு வழங்குகிறது.
இந்நிலையில் நடிகர் சூர்யா கொரோனாவால் வருமானம் இல்லாமல் கஷ்டப்படும் தனது ரசிகர்களுக்கு நிதி உதவி அளித்துள்ளார். அனைத்து மாவட்டங்களிலும் ரசிகர் மன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் நிர்வாகிகள் 200 பேருக்கு தலா ரூ.5 ஆயிரம் வழங்கி உள்ளார்.
இத்தொகையை ரசிகர்களின் வங்கி கணக்கிலேயே நேரடியாக செலுத்தி உள்ளார். கொரோனா கால கஷ்டத்தில் சூர்யா அனுப்பி உள்ள தொகை பெரிய உதவியாக இருப்பதாக ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.