இந்தியாவில் கொரோனா வைரஸின் 2 ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தொடக்கத்தில் மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகமாக இருந்த நிலையில் தற்போது குறைய தொடங்கியுள்ளது. தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் அதிக அளவில் பரவி வருகிறது.
அண்மை காலமாக கொரோனா தொற்றால் திரைப் பிரபலங்கள் பலரும் உயிரிழந்து வருகின்றனர். அந்த வகையில் நடிகரும் சினிமா விமர்சகருமான வெங்கட் சுபா கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.
கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த வெங்கட் சுபா தற்போது சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இவரின் மறைவுக்கு திரை பிராபலங்கள் முதல் ரசிகர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.