கொரோனா வைரஸின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், பிரபல நடிகரின் தந்தை கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
குட்டிப்புலி, வேதாளம், திருடன் போலீஸ், டார்லிங், ஒருநாள் கூத்து, இருட்டு அறையில் முரட்டு குத்து, ஈஸ்வரன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் நடிகர் பால சரவணன்.
இந்நிலையில், இவரது தந்தை எஸ்.ஏ. ரங்கநாதன் (60) கொரோனா தொற்று காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த அவர், இன்று (11.06.2021) சிகிச்சை பலனின்றி காலமானார். இவரது இந்த திடீர் மறைவுக்குப் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்துவருகின்றனர். இவரது உடல் இன்று மாலை தகனம் செய்யப்படவுள்ளது.
கடந்த மாதம் பால சரவணனின் தங்கையின் கணவர் கொரோனாவால் உயிரிழந்தார். அவருக்கு வயது 32 தான்.
நடிகர்கள் வெங்கட் சுபா, நிதிஷ் வீரா, மாறன், பவுன்ராஜ், குட்டி ரமேஷ், அருண்ராஜா காமராஜின் மனைவி என பலர் கொரோனாவால் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.