ஆந்திர தனியார் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் 25 லட்சம் ரூபாய் முதலீடு செய்ததாகவும் அந்தக் நிறுவனம் தங்களை ஏமாற்றி விட்டதாகவும் சென்னை கானத்தூர் காவல் நிலையத்தில் நடிகை சினேகா தரப்பில் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது.
நடிகை சினேகா ரூபாய் 25 லட்சத்தை கவுரி மினரல் சிமெண்ட் ஏற்றுமதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். முதலீடு செய்யும் போது ரூ. 25 லட்சம் முதலீடு செய்தால் மாதந்தோறும் ரூ. 1.80 லட்சம் கிடைக்கும் என்று அந்நிறுவனம் தரப்பில் கூறியதாகவும், இதுதொடர்பாக ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் ஒப்பந்தப்படி மாதந்தோறும் பணத்தை அந்நிறுவனம் தரவில்லை என்றும், வட்டி கேட்டதற்கு தன்னை மிரட்டுவதாகவும், இதனால் அந்நிறுவனம் ஏமாற்றி விட்டதாக கூறி நடிகை சினேகா கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.