சினிமா

பள்ளிகளில் பாலியல் என்பதே பெரும் கேவலம்; நடிகை ஆர்த்தி கண்டனம் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னையில் அமைந்துள்ள கே.கே.நகரிலுள்ள  பி.எஸ்.பி.பி பள்ளியில் மாணவிகளிடம்  பொருளியல் ஆசிரியர் ராஜகோபாலன் ஆன்லைன் வகுப்பில் நிர்வாணமாக பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், மாணவிகளுக்கு ஆபாச குறுந்செய்தி அனுப்பியதாகவும் புகார் எழுந்தது.

அதனையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு  காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார். ஆசிரியரின் இந்த செயலுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை ஆர்த்தி ஆசிரியர் ராஜகோபாலனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,  “ஆசிரியர் பணி, அறப்பணி என்பதை மறந்து அசிங்கப் பணி செய்த கயவனுக்கு அரசு கொடுக்கப்போகும் தண்டனை இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதபடி கடுமையானதாக அமைதல் வேண்டும். நாளைய தலைமுறையை உருவாக்கும் பள்ளிகளில் பாலியல் என்பதே பெரும் கேவலம். அதற்கு அந்தந்தப் பள்ளியே பொறுப்பேற்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 


Share
ALSO READ  "அதிமுகவில் நிறைய குழப்பங்கள் இருக்கிறது"; விஜயபிரபாகரன் பேட்டி!
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

‘விஜய்’யின் மாஸ்டர் படத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ள தனுஷ்…!

News Editor

நடிகை நிவேதா தாமஸுக்கு கொரோனா தொற்று !

News Editor

நயன்தாராவுடன் திருமணம் எப்பொழுது?: விக்னேஷ் சிவன் கொடுத்த அடடே விளக்கம்..!

naveen santhakumar