தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மும்பை:
மும்பை மாநகராட்சியால் தனது அலுவலகம் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் நடிகை கங்கனா உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
விதிகளை மீறி கட்டப்பட்டதாக கூறி நடிகை கங்கனாவின் மும்பை அலுவலகம் மாநகராட்சியால் இடிக்கப்பட்டது. இதற்கு எதிராக அவர் 2 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் கட்டிடம் இடிக்கப்பட்டது தவறு என தீர்ப்பளிக்கப்பட்டது.மேலும் சேதம் குறித்து மதிப்பீட்டாளர் கணக்கிடும் தொகையை, மாநகராட்சி இழப்பீடாக வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தனது அலுவலகம் இடிக்கப்பட்டது தொடர்பான வழக்கில் தன்னை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது என கூறி உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.