சென்னை:-
நடிகையும் காங்கிரஸ் கட்சி உறுப்பினருமான குஷ்பு பத்திரிகையாளர்களைத் தவறாகப் பேசியிருப்பது போன்ற ஆடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில் குஷ்பு பேசியதாவது:-
“ப்ரஸ்காரர்கள் எங்கிருந்தாவது வந்துவிடுவார்கள். போட்டோ, வீடியோ எடுத்துக் கிழிப்பதற்கு என்று எங்கியிருந்தாவது வருவான். உட்கார்ந்து கொண்டிருப்பான். கோவிட் தவிர்த்து ப்ரஸ்காரனுக்கு வேறு எந்தவொரு செய்தியுமே கிடையாது. நம்மைப் பற்றி ஏதாவது போடுவதற்குக் காத்துக் கொண்டிருப்பார்கள். ஆகையால் ப்ளீஸ் பத்திரம்” என்று பேசியுள்ளார் குஷ்பு. இந்த ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
தற்போது குஷ்பு இந்த விவகாரம் தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
குஷ்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:-
என் பெயரில் பரப்பப்படும் அந்த ஆடியோ எடிட் செய்யப்பட்டது. அது தயாரிப்பாளர்களின் வாட்ஸ் ஆப் குருப்பில் இருந்து பகிரப்பட்டுள்ளது. எப்படி இவ்வளவு கீழ்த்தரமான புத்தி உள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை நினைத்து அவமானமாக இருக்கிறது.
எனது 34 வருட சினிமா வாழ்க்கையில் என்றுமே நான் ஊடகங்களை தரக்குறைவாக பேசியது கிடையாது. பாதி மட்டுமே வெளியாகியுள்ள அந்த வாய்ஸ் மெஸேஜால் யாராவது பாதிக்கப்பட்டு இருந்து மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். அந்த ஆடியோவை யார் பரப்பினார்கள் என்பது தெரியும். ஆனால் நான் அவரின் பெயரை வெளியே சொல்லப்போவதில்லை. எனது மன்னிப்பே அவருக்கு மிகப்பெரிய தண்டனை செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது” என்று கூறியுள்ளார்.
கொரோனா பரவல் அச்சுறுத்தலால் காரணமாக சுமார் 70 நாட்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டிருந்த சின்னத்திரை படப்பிடிப்பு தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனிடையே தான் குஷ்புவின் இந்த ஆடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.