நடிகை மீரா மிதுன் ஜாமின் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்தனர் . சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .
நடிகை மீரா மிதுன் , தாழ்த்தப்பட்டோரை அவதுாறாக பேசினார். மற்றும், சமூக வலைத்தளத்தில் வீடியோவை வெளியிட்டுள்ளார் .
இதுதொடர் பாக , விடுதலை சிறுத்தைகள் கட்சி உட்பட பல்வேறு அமைப்புகள் , அவர் மீது போலீசில் புகார் அளித்தன .
வன்கொடுமை தடுப்பு சட்டம் உட்பட , பல பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்தனர் .
இந்த வழக்கில் ஜாமின் கேட்டு , மீரா மிதுனும் , அவரது நண்பரும் ஏற்கனவே தாக்கல் செய்தனர்.
மற்றும், மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது . மீரா மிதுனின் நீதிமன்ற காவல் , செப்9 வரை நீட்டிக்கப்பட்டது .
இந்நிலையில் , தற்போது ஜாமின் கேட்டு மீரா மிதுனும், அவரது நண்ப ரும் , சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர் .
இந்த மனு நீதிபதி ஆர்.செல்வகுமார் மூன் , நேற்று விசாரணைக்கு வந்தது .
அப்போது , அரசு சிறப்பு குற்றவியல் வழக்கறிஞர் சத்யா , ஜாமின் வழங்க ஆட்சேபம் தெரிவித்தார்.
இதையடுத்து , ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார் .