சினிமா

சைலன்ட் திரில்லர் படத்தில் மீண்டும் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நடிகை நயன்தாரா தற்போது நெற்றிக்கண், அண்ணாத்த, காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இவற்றில் ‘நெற்றிக்கண்’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ளது. இதில் அவர் பார்வையற்றவராக நடித்து இருக்கிறார்.அதேபோல் ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்திலும் நடித்து முடித்து விட்டார் நயன்தாரா. இந்த படத்தில் அவர் வக்கீல் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

ALSO READ  சித்தார்த் சுக்லாவின் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் ஜான் சீனா.
Nayanthara Angry - Nayanthara Hot News Latest | KollyTube | Tamil Cinema -  YouTube

அவர் நடிக்கும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தை அவரது காதலர் விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இதில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறார் நயன்தாரா. இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.இந்நி்லையில் நடிகை நயன்தாரா, தற்போது சைலன்டாக திரில்லர் படம் ஒன்றில் நடித்து வருகிறார். இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபுவின் உதவியாளர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்குகிறார். இந்த படத்தின் கதை மிகவும் பிடித்துப் போனதால் உடனே நடித்துக் கொடுத்து வருகிறாராம் நயன்தாரா.

Nayanthara is Tamil cinema's woman superstar, watching her first day first  show tells you why | The News Minute

குறுகிய கால தயாரிப்பாக இப்படம் தயாராகி வருகிறதாம். யோஹன் இசையமைக்கும் இப்படத்திற்கு தமிழ் ஒளிப்பதிவு செய்கிறார். நடிகை நயன்தாரா, இதற்கு முன் மாயா, ஐரா, டோரா போன்ற திரில்லர் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிக்பாஸ்-4 நிகழ்ச்சி ஆரம்பமா??????

naveen santhakumar

ஸ்ருதிஹாசன் வயிற்றில் அவரது காதலன் செய்த வேலை :

Shobika

முதல்வரின் கொரோனா நிதிக்கு ரூ.1 லட்சம் நிதி அளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

News Editor