நடிகை நிதி அகர்வால் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான முன்னா மைக்கல் என்ற இந்தி படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமா துறையில் அறிமுகமானார். அதனையடுத்து தெலுங்கில் ஸ்மார்ட் சங்கர் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப்படம் வெளியாகி இவரின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டத்து.
அதனை தொடர்ந்து பொங்கல் தினத்தையொட்டி வெளியான பூமி படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாகவும், ஈஸ்வரன் படத்தில் சிம்புவிற்கு ஜோடியாகவும் நடித்திருந்தார். இந்த படம் இவருக்கு தமிழ் சினிமாவில் நல்ல வரவேற்பினை பெற்று தந்துள்ளது.
இந்நிலையில் சென்னை காட்டுப்பாக்கம் பகுதியை சேர்ந்த நிதி அகர்வாலின் தீவிர ரசிகர்கள் அவருக்கு சிலை வைத்து பாலாபிஷேகம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் நேற்று வெளியாகி ரசிகர்களால் ட்ரெண்ட் செய்யப்பட்டு வருகிறது.
இது குறித்து நடிகை நிதி அகர்வால் கருத்து தெரிவித்துள்ளார். அதில் எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. நான் இதை எதிர்பார்க்கவே இல்லை. இது தான் எனக்கு கிடைத்த மிகச்சிறந்த காதலர்தின பரிசு. என்னுடைய ரசிகர்களை நான் பெருத்தும் நேசிக்கிறேன். இவர்கள் தரும் ஊக்கங்களால் இன்னும் நிறைய நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற உற்சாகம் தோன்றுகிறது. என் ரசிகர்களுக்கு நன்றி, உங்களை தொடர்ந்தது மகிழ்விப்பேன் என்று தெரிவித்துள்ளார்.