சினிமா

பாலியல் புகார்; சிறுமிகளை நினைத்தால் பெருமையாக இருக்கிறது..நடிகை நிவேதா !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தமிழகத்தில் கொரோனா அதன் கோரமுகத்தை காட்டி வருகிறது. அதனால் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அந்தவகையில் கல்லூரி, பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் ஆசிரியர்கள் வகுப்புகள் எடுக்கப்பட்டுவருகின்றன.

இந்நிலையில், சென்னையில் அமைந்துள்ள கே.கே.நகரிலுள்ள பிரபல தனியார் பள்ளியில் மாணவிகளிடம்  பொருளியல் ஆசிரியர் ராஜ கோபாலன் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாகவும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும், அப்பள்ளியின் முதல்வருக்கு புகார் அளிக்கப்பட்டது. 

ஆசிரியரின் இந்த செயலுக்கு எம். பி கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன், பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட பல அரசியல்முதல் பொதுமக்கள் வரை தங்களின் எதிர்ப்புகளையும் கண்டனங்களையும் பதிவுசெய்து வந்தனர். அந்தவகையில் ஆசிரியரின் இந்த செயலுக்கு நடிகை நிவேதா பெத்துராஜ் கண்டனம் தெரிவித்துள்ளார். 

ALSO READ  ரீ-மிக்ஸ் பாடல்கள் போர்… சொன்னது யார் தெரியுமா?

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “பி.எஸ்.பி.பி பள்ளி சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. குற்றவாளியை வெளி உலகுக்குச் சுட்டிக்காட்டிய சிறுமிகளை நினைத்தால் பெருமையாக இருக்கிறது. அந்த அரக்கனுக்கு எதிராக முறையான விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று நம்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஐந்து மொழிகளில் பிரம்மாண்டமாக தயாராகும் ஜீவன் நடிக்கும் படம் :

naveen santhakumar

ஆட்டோவில் செல்லும் அஜித்; இணையத்தில் வைரலாகும் வீடியோ !

News Editor

நடிகை நிதி அகர்வாலுக்கு சிலை..!

News Editor