சினிமா

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட நடிகை ரம்யா பாண்டியன் !

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது.   கடந்த சில நாட்களாக நாட்டில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 3.5 லட்சத்தை கடந்து வருகிறது. 

குறிப்பாக மகாராஷ்டிரா, குஜராத், டெல்லி, தமிழ்நாடு, கேரளா, உத்தரபிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

வேகமாக பரவி வரும் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது  மத்திய, மாநில அரசுகள், அதன் ஒரு பகுதியாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் முடுக்கிவிட்டுள்ளது. இருப்பினும், தடுப்பூசிகள் குறித்து மக்களிடம் நிலவிவரும் குழப்பம் காரணமாக பொதுமக்கள் பலரும் தடுப்பூசி எடுத்துக் கொள்ள தயக்கம் காட்டுகின்றனர்.

ALSO READ  கொரோனா எதிரொலி; சிவில் சர்வீஸ் தேர்வு ஒத்திவைப்பு !

தடுப்பூசி குறித்து மக்களிடையே நிலவும் அச்சத்தைப் போக்கும் நோக்கோடு திரைத்துறை, அரசியல் பிரமுகர்கள் பலரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு பொதுமக்களையும் தடுப்பூசி செலுத்துமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், நடிகை ரம்யா பாண்டியன் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டேன். அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டு வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

ALSO READ  'ராஜவம்சம்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிரபல ஹவுஸ்புல் பட இயக்குனர் மீது பாலிவுட் நடிகை பாலியல் குற்றசாட்டு..!

News Editor

பத்மநாபசுவாமி கோவில் பின்னணியில் வரலாற்று படம்- இயக்குநர் ஆர்.எஸ்.விமல்…

naveen santhakumar

“நெஞ்சம் மறப்பதில்லை” படத்திற்கு உயர்நீதிமன்றம் தடை !

News Editor