“தி ஃபேமிலி மேன்” சீரிஸ் அமேசான் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் மனோஜ் பாஜ்பாய், பிரியாமணி, ஷரத் கெல்கர் உள்ளிட்ட பலர் இதில் நடித்திருந்தனர். ராஜ் மற்றும் டிகே இணைந்து இந்த வெப் சீரிஸை இயக்கிருந்தனர். முதல் சீசனின் வெற்றியை தொடர்ந்து அமேசான் பிரைம் தற்போது இரண்டாவது சீசனை தயாரித்துள்ளது.
நடிகை சமந்தா தி ஃபேமிலி மேன் 2 தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்த தொடர் வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் இந்த தொடரின் டிரைலர் வெளியானது. இந்த டிரைலர் மாபெரும் வரவேற்பை ரசிகர்கள் மத்தியில் பெற்றிருந்தாலும் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
தி ஃபேமிலி மேன் 2 தொடரை வெளியிட கூடாது என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர். மேலும் தமிழர்கள் மத்தியில் பெரும் கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் பெற்று வருகிறது. இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒருபடி மேலே சென்று இந்த தொடரை வெளியிட்டால் கடுமையான கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.
இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் நடிகை சமந்தா ட்வீட் செய்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், அமைதியாக இருங்கள், நம்பிக்கையுடன் இருங்கள்’ என்று பதிவு செய்து மார்ட்டின் லூதர் கிங்கின் பொன்மொழியான ’முழுப்பாதையும் தென்படாவிட்டால் முதலடியை எடுத்து வைப்பதற்கு நம்பிக்கையே முக்கியம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.