கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் நடிகர் கதிர் நடிப்பில் வெளியான திரைப்படம் மதயானைக்கூட்டம். கிராமத்து கதைக்களத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படம் வெளியாகி வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதனையடுத்து தற்போது மீண்டும் இப்படத்தின் கூட்டணி இணைய உள்ளதாகதகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், விக்ரம் சுகுமாறனின் அடுத்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, ‘மதயானைக் கூட்ட’த்தில் நாயகனாக நடித்த கதிர், இப்படத்திலும் நாயகனாக நடிக்க உள்ளார். லிப்ரா ப்ரொடக்ஷன் சார்பில் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிக்கிறார். பிற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. `மதயானைக் கூட்டம்’ பட வெற்றிக்கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது, படம் குறித்த எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கச் செய்துள்ளது.